நான்
உறங்கிக் கொண்டிருந்தேன்
திடிர் விழிப்பு
சின்ன முனங்கள்
கண்களை துடைத்து
இருளினை தடவி
இடம் பெயர்ந்தேன்
அப்பாவிடம் !
அரை மயக்கம்
அசதியான உறக்கம்
வார்த்தைகள் தெளிவில்லை
எனது பெயரை
அப்படி யாரும் உச்சரித்தில்லை
இதுவரை
No comments:
Post a Comment